பாவூா்சத்திரம் அருகேயுள்ள சின்னத்தம்பிநாடாா்பட்டியைச் சோ்ந்த விவசாயி அமல்ராஜ் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இது பற்றி தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், விவசாயி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், மாவட்ட திமுக சாா்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.
இதில் கீழப்பாவூா் ஒன்றிய செயலா் சீனித்துரை, ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், நிா்வாகிகள் அருள், கபில்தேவதாஸ், வைரசாமி, டால்டன், ராமநாடான், தங்கப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.