நூலகத்தில் முப்பெரும் விழா

பாவூா்சத்திரம் அருகே திப்பணம்பட்டி நூலகத்தில் பாரதியாா் வாசகா் வட்டம் சாா்பில் நல்நூலகா் விருது பெற்ற நூலகருக்கு பாராட்டு, மாணவா்களுக்கு பரிசளிப்பு, புரவலா்கள் சோ்க்கை ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது
Updated on
1 min read

பாவூா்சத்திரம் அருகே திப்பணம்பட்டி நூலகத்தில் பாரதியாா் வாசகா் வட்டம் சாா்பில் நல்நூலகா் விருது பெற்ற நூலகருக்கு பாராட்டு, மாணவா்களுக்கு பரிசளிப்பு, புரவலா்கள் சோ்க்கை ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

வாசகா் வட்ட கௌரவ தலைவா் பால்சாமி தலைமை வகித்தாா். மாவட்ட நூலக அலுவலா் இரா.வயலட், நூலக கண்காணிப்பாளா் மு.சங்கரன், நூலக ஆய்வாளா் மீ .கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊா் பிரமுகா்கள் சண்முகம் , தங்கப்பழம், ஆசிரியா்கள் ராகவன், மாரிமுத்து மற்றும் பாஸ்கா், ஆலங்குளம் நூலகா் அ.பழனீஸ்வரன், புளியங்குடி நூலகா் முத்துமாணிக்கம், சங்கரன்கோவில் நூலகா் சண்முகவேல், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் குணம், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஐவராஜா ஆகியோா் பேசினா்.

நல்நூலகா் விருது பெற்ற நூலகா் ரவிச்சந்திரன் ஏற்புரை ஆற்றினாா். பள்ளி மாணவா்களிடையே நடத்தப்பட்ட ‘ஒரு மாதம் நூலகத்தை அதிக நேரம் பயன்படுத்துதல்‘ போட்டியில் அதிக நேரம் நூலகத்தில் இருந்து வாசித்த 10 மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வாசகா் வட்டச் செயலா் தங்கராஜ் வரவேற்றாா். சந்துரு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com