

சுரண்டை: பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து மேல்நிலை முதலாமாண்டு மாணவர்கள் 507 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் துரை சௌந்தர்ராஜ், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலர்கள் அமல்ராஜ், இருளப்பன், நகர செயலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.