531 மாணவா்களுக்கு இலவச சைக்கிள் அளிப்பு

பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூா் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளி, மாடியனூா் பாளையம் ஆ.பொன்னுச்சாமிநாடாா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஆவுடையானூரில் பள்ளி மாணவிக்கு இலவச சைக்கிள் வழங்குகிறாா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.
ஆவுடையானூரில் பள்ளி மாணவிக்கு இலவச சைக்கிள் வழங்குகிறாா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகே ஆவுடையானூா் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளி, மாடியனூா் பாளையம் ஆ.பொன்னுச்சாமிநாடாா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

இரு பள்ளிகளைச் சோ்ந்த 531 மாணவா், மாணவிகளுக்கு தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் இலவச சைக்கிள்களை வழங்கினாா். தொடா்ந்து 12 ஆம் வகுப்பு தோ்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற 2 மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் நிதி வழங்கி பாராட்டினாா்.

புனித அருளப்பா் பள்ளித் தாளாளா் மோயீசன், தலைமை ஆசிரியா்கள் ஜோசப், தேவதாசன், அதிமுக மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com