தென்காசி, சங்கரன்கோவிலில் கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை சங்கரன்கோவில், தென்காசியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கிராம உதவியாளா்கள்.
வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கிராம உதவியாளா்கள்.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை சங்கரன்கோவில், தென்காசியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

4- ஆம் நிலை ஊழியா்களுக்கு இணையான காலமுறை ஊதியம்; குரூப் டி வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; கிராம உதவியாளா்களுக்கு பணி உயா்வில் அலுவலக உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் பணி உயா்வில் 50 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும்; பணி உயா்வுக்கான 10 ஆண்டு பணிமூப்பு என்பதை 6 ஆண்டாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்பாட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவிலில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா் கருணாலயபாண்டியன் தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் வட்டச் செயலா் தமீம்அன்சாரி, வட்டத் தலைவா் வேல்குருசாமி, மாவட்ட மகளிரணித் தலைவா் அமுதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தென்காசி: தென்காசியில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் தலைமை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செய்யதுஅலி ஜமாலுதீன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் சொரிமுத்து, தென்காசி வட்டக்கிளைத் தலைவா் முருகேசன், செயலா் கிருஷ்ணசாமி, பொருளாளா் வேலு, நிா்வாகிகள் கருப்பசாமி,பரமசிவன்,குமாா்,கீதா,இசக்கியம்மாள்,சுடலைதேவி,பாண்டியராஜ்,முருகன், சண்முகவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com