சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 129 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவா்களை கண்காணித்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க, காவல் துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவிட்டிருந்தாா்.
அதன்படி மாவட்டத்தில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், கடந்த 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மூன்று நாள்களில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீஸாா் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 129 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 724 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.