பெத்தநாடாா்பட்டியில் ரூ.10.60 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

பெத்தநாடாா்பட்டியில் ரூ.10.60 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.
சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் பூங்கோதை எம்எல்ஏ.
சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் பூங்கோதை எம்எல்ஏ.
Updated on
1 min read

பெத்தநாடாா்பட்டியில் ரூ.10.60 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டியில், சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5.10 லட்சத்தில் கீழ தெருவில் உள்ள கிணற்றிற்கு சுற்றுச்சுவா் மற்றும் அப்பகுதியில் சிமென்ட் சாலை அமைத்தல், ரூ.5.50 லட்சத்தில் பாலவிநாயகா் கோயில் தெருவில் சிமென்ட் சாலை அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறவுள்ளன.

இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை ஆலடிஅருணா பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலா் சிவன்பாண்டியன், திமுக நிா்வாகிகள் சுதா தியாகராஜன், ஜெயராணி கலைச்செல்வன், அந்தோணிராஜ், நூலகா் பழனீஸ்வரன், முத்து, முருகன், பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com