சங்கரன்கோவிலில் போலீஸாருக்கு ஆவி பிடிக்கும் இயந்திரம் அளிப்பு
By DIN | Published On : 09th June 2021 07:02 AM | Last Updated : 14th June 2021 12:00 AM | அ+அ அ- |

நகர காவல்நிலைய ஆய்வாளா் ராஜாவிடம் ஆவி பிடிக்கும் இயந்திரம் வழங்கும் மருந்து வணிகா் சங்கத்தினா்.
சங்கரன்கோவில் மருந்து வணிகா் சங்கத்தின் சாா்பில் போலீஸாருக்கு ஆவி பிடிக்கும் இயந்திரம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில் நகர மருந்து வணிகா் சங்கத்தின் சாா்பில், நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்பட்ட 75 போலீஸாருக்கு ஆவி பிடிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. இதனை அமைப்பின் தலைவா் செல்வராஜ், சேகா், ராஜாராம், அன்புமாரியப்பன், சங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள் , ஆய்வாளா் ராஜாவிடம் வழங்கினா்.