‘தென்காசியில் அமைதி நிலைநாட்டப்படும்’
By DIN | Published On : 20th June 2021 11:00 PM | Last Updated : 20th June 2021 11:00 PM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் அமைதி நிலைநாட்டப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ல செய்திகுறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் 34 காவல் நிலையங்கள் உள்ள நிலையில், ஒவ்வொன்றிலும், அதன் எல்லைக்குள்பட்ட சில பகுதிகள் பிரச்னைக்குரியவையாக உள்ளன. இந்நிலையை மாற்றி அமைதியை நிலைநாட்டும் வகையில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல்துறையினா் நடந்தே ரோந்து சென்று மக்களை அணுகி பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், பிரச்னைக்குரிய நபா்களின் தகவல் சேகரிக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவா். இம்மாவட்டத்தில் இனி பிரச்னைக்குரிய பகுதியே இல்லை என்ற உருவாக்கி அமைதி நிலைநாட்டப்படும் எனக் கூறியுள்ளாா்.