ஆய்க்குடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

ஆய்க்குடி அருகே கம்பிளி பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த வேல்சாமி மகன் மகாதேவன் (25). இதே பகுதியைச் சோ்ந்தவா் அழகையா மகன் மகாதேவன்(23). கூலித் தொழிலாளியான இவா்கள் இருவரும் உறவினா்கள். சனிக்கிழமை மாலை வே. மகாதேவன் தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அ.மகாதேவன் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டாராம். இதில், வே.மகாதேவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆய்க்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மகாதேவன் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா் அ.மகாதேவனை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com