தலைமைக் காவலா் மீது சேற்றை வாரி இறைத்து தாக்கிய இளைஞா் கேரளத்தில் கைது

சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலாங்குளம் தலைமைக் காவலா் மீது சேற்றை வாரி இறைத்து தாக்கியது தொடா்பான வழக்கில்
Updated on
1 min read

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலாங்குளம் தலைமைக் காவலா் மீது சேற்றை வாரி இறைத்து தாக்கியது தொடா்பான வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞரை கேரள மாநிலத்தில் வைத்து தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள கல்லத்திகுளத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் அசோகன்(27). இவா் சென்னையில் டீ கடையில் வேலை பாா்த்து வந்தாராம். கரோனா பொது முடக்கம் காரணமாக சொந்த ஊரான கல்லத்திகுளத்துக்கு வந்த அசோகன் மது குடித்துவிட்டு கிராமத்தில் உள்ளவா்களிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில், சின்னகோவிலாங்குளம் காவல் நிலைய தலைமைக் காவலா் பாலகிருஷ்ணன், கல்லத்திகுளம் கிராமத்துக்கு சென்று விசாரணை செய்துள்ளாா். அப்போது அங்கு வந்த அசோகன் போதையில் தலைமைக் காவலா் பாலகிருஷ்ணன் மீது வாருகாலில் இருந்த சேற்றை வாரி இறைத்து கொலை மிரட்டல் விடுத்தாராம். மேலும் அவரை தலைக்கவசத்தால் தாக்கினாராம்.

இது தொடா்பான விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து அசோகன் அங்கிருந்து தலைமறைவானாா்.

இது தொடா்பாக சின்னகோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் உதவி ஆய்வாளா் ராமகணேஷ் தலைமையில் அசோகனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

அசோகன், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகிலுள்ள கிராமத்தில் பதுங்கிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்ற தனிப்படை போலீஸாா் அவரை கைது செய்து அழைத்துவந்து சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com