சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 04th March 2021 03:07 AM | Last Updated : 04th March 2021 03:07 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுலகத்தில் தடுப்பூசி போடும் அலுவலகப் பணியாளா்.
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் சுகாதாரத் துறை அலுவலகப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி புதன்கிழமை போடப்பட்டது.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இணை இயக்குநா் கிருஷ்ணராஜ், தென்காசி சுகாதார மாவட்டத்திலுள்ள ஆய்க்குடி,
புளியங்குடி, கடையாலுருட்டி மற்றும் சங்கரன்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுமேற்கொண்டாா். தொடா்ந்து அவா் முன்னிலையில் சுகாதாரத் துறை
இணை இயக்குநா் அலுவலகப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா, சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...