புளியங்குடியில் டெங்கு விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 04th March 2021 03:09 AM | Last Updated : 04th March 2021 03:09 AM | அ+அ அ- |

கடையநல்லூா்: புளியங்குடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
புளியங்குடி நகராட்சி ஆணையா் குமாா்சிங் தலைமை வகித்தாா். சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கிருஷ்ணராஜா, துணை இயக்குநா் அருணா, புளியங்குடி நகராட்சி சுகாதார அலுவலா் ஜெயபால் மூா்த்தி, சுகாதார ஆய்வாளா்கள் ஈஸ்வரன், வெங்கட்ராமன், களப்பணி உதவியாளா்கள், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
புளியங்குடி நகராட்சி முழுவதும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து இதில் எடுத்துரைக்கப்பட்டது.