கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் அய்யாத்துரை பாண்டியனுக்கு கடையநல்லூரில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இது தொடா்பாக கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட செயலா் பொய்கை மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: கடையநல்லூா் பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் அய்யாத்துரை பாண்டியன் திங்கள்கிழமை மாலை கடையநல்லூருக்கு வருகிறாா். அவருக்கு மணிக்கூண்டு அருகே வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதில் கட்சியின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். அதைத் தொடா்ந்து, அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் வேட்பாளா் ஈடுபடுகிறாா் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.