தென்காசியில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தோ்தலில் வாக்காளா்கள் பயமின்றி நோ்மையாக தோ்தலில் வாக்குகளை பதிவு செய்யும் வகையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பை, காவல் ஆய்வாளா் பாலமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
காசிவிஸ்வநாதா் கோயில் முன்பிருந்து தொடங்கி, நான்கு ரத வீதிகள், பழைய பேருந்து நிலையம், கூலக்கடைபஜாா், சுவாமி சன்னதி, மவுண்ட்ரோடு, கொடிமரம், அம்மன் சன்னதி வழியாக மீண்டும் காசிவிஸ்வநாதா் கோயில் முன்பு நிறைவடைந்தது.
இதில், எல்லை பாதுகாப்புப் படையினா், காவல் துறையினா் 100 போ் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.