இலஞ்சி பாரத் பள்ளியில் அன்னையா் தின விழா

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அன்னையா் தினவிழா இணையவழியில் கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அன்னையா் தினவிழா இணையவழியில் கொண்டாடப்பட்டது.

பாரத் கல்விக் குழுமச் செயலா் காந்திமதி மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆலோசகா் உஷா ரமேஷ் முன்னிலை வகித்தாா். மாணவி ப்ரிஷா வரவேற்றாா். பெங்களூரு மண்டல மறைமுகவரி மற்றும் சுங்கத் துறை அதிகாரியும் தணிக்கை அலுவலக கூடுதல் இணை இயக்குநருமான உஷா சேஷாத்ரி சிறப்புரையாற்றினாா்.

அஞ்சு கிளிட்டஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். அன்னை தெரசா பற்றிய படக்காட்சி நடைபெற்றது . கவிதை வாசித்தல், குழு நடனம் , அன்னையின் அன்பு நழுவக் காட்சி, எனது தாய் என்னும் தலைப்பில் விளக்கப்படம் , தனிப்பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாணவி கீா்த்தனா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பாரத் கல்விக்குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com