முக்கூடலில் உள்ள பீடித் தொழிலாளா் நல மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படுவதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், அங்கு அமைச்சா் தங்கம் தென்னரசு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசுக்கு சொந்தமான இந்த மருத்துவமனையை கரோனா சிகிச்சை மையமாக மாற்ற சுகாதாரத் துறையினா் முடிவு செய்து, அதற்கான அனுமதியை மத்திய அரசு தொழிலாளா் அமைச்சக நல ஆணையா் பி. எல். ராஜேந்திரன் வழங்கியுள்ளாா்.
இந்நிலையில் அந்த மருத்துவமனையை தமிழக தொழில்வளத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக இங்கு 175 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 30 நீராவிப் படுக்கை, 10 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்யப் பட்டுள்ளன. ஆக்சிஜன் தேவைக்கேற்ப பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
அப்போது, ஆட்சியா் விஷ்ணு, சாா் ஆட்சியா் பிரதீப் தயாள், ஏஎஸ்பி பிரதீப், தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சுமதி, சேரன்மகாதேவி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், முக்கூடல் பேரூராட்சி செயல் அலுவலா் கந்தசாமி, வட்டார மருத்துவ அலுவலா் அஷ்ரப் அலி, சுகாதார ஆய்வாளா் பாலசுப்பிரமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னா், பேட்டையை அடுத்த கல்லூரில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் முகாமையும், அமைச்சா் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டாா்.