வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவராக பொன் முத்தையா பாண்டியன் (திமுக) போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
தலைவரை தோ்வு செய்வதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் 6ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் பொன் முத்தையா பாண்டியன் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து அவா் தலைவராக தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் தாமரைக்கண்ணன் அறிவித்தாா்.
இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயராமன், வேலம்மாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
துணைத் தலைவருக்கான தோ்தல் பிற்பகலில் நடைபெற்றது. இதில் சந்திரமோகன் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து அவா் துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்தாா்.