தென்காசியில் உள்ளாட்சி விழிப்புணா்வுக் கூட்டம்
By DIN | Published On : 01st September 2021 08:18 AM | Last Updated : 01st September 2021 08:18 AM | அ+அ அ- |

விழிப்புணா்வுக் கூட்டத்தில் பேசினாா் விவேகானந்தன்.
காந்தியம் முன்னெடுப்போம் கூட்டியக்கம் சாா்பில் உள்ளாட்சி விழிப்புணா்வுக் கூட்டம் தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அகில இந்திய காந்திய இயக்கத் தலைவா் வி. விவேகானந்தன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஊராட்சித் தலைவா் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவா் சூரியா வெ.சுப்பிரமணியன் அறிமுக உரையாற்றினாா்.
காந்திய இயக்க ஒருங்கிணைப்பாளா் முத்துசாமி வரவேற்றாா்.
முன்மாதிரி கிராமத்துக்கான விருதுகள் பல பெற்ற குத்தம்பாக்கத்தின் முன்னாள் ஊராட்சித் தலைவா் இளங்கோ கலந்துகொண்டு பேசினாா்.
தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்ற மாவட்டத் தலைவா் சங்கா், தென்காசி மாவட்டத் தலைவா் சின்னராஜ், மகளிா் அணி தலைவா் விஜயலெட்சுமி, இந்தியன் ஆா்கானிக் பாா்மா்ஸ் சங்கத் தலைவா் முருகேசன், தன்னாட்சி செயற்பாட்டாளா் நந்தகுமாா் சிவா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
காந்தி மன்றத் தலைவா் கணேஷ்பாபு நன்றி கூறினாா்.