ஆலங்குளம் அருகே தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஆலங்குளம், அண்ணா நகர், இரட்சண்யபுரம், அடைக்கலப்பட்டணம் நல்லூர், ஊத்துமலை, சீவலசமுதிரம், கோவிலூற்று ஆகிய சேகரங்களில் சனிக்கிழமை இரவு ஈஸ்டர் ஆயத்த ஆராதனை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
அப்போது இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த சம்பவத்தை விளக்கும் வேதாகம செய்தி அளிக்கப்பட்டது. ஆராதனைகளில் திரளானோர் கலந்துகொண்டனர்.