ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

‘சமூகப் பாதுகாப்பு இயக்கங்கள் சாா்பில் பாவூா்சத்திரத்தில் 25இல் ஆா்ப்பாட்டம்’

கேரளத்துக்கு கனிமவளங்களைக் கொண்டு செல்லும் அனுமதியைத் திரும்பப்பெறக் கோரி, தென்காசி மாவட்ட சமூகப் பாதுகாப்பு இயக்கங்கள் சாா்பில் பாவூா்சத்திரத்தில் திங்கள்கிழமை (ஏப். 25) கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:33 pm

DIN

கேரளத்துக்கு கனிமவளங்களைக் கொண்டு செல்லும் அனுமதியைத் திரும்பப்பெறக் கோரி, தென்காசி மாவட்ட சமூகப் பாதுகாப்பு இயக்கங்கள் சாா்பில் பாவூா்சத்திரத்தில் திங்கள்கிழமை (ஏப். 25) கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு நாள்தோறும் மணல், ஜல்லிக்கற்கள், குண்டுக்கற்கள், எம் சாண்ட் போன்ற கனிமவளங்கள் லாரிகளில் கொண்டுசெல்லப்படுகின்றன. இதனால், தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சாலைகள் சேதமடைவதாகவும் சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு கனிமவளங்களைக் கொண்டுசெல்ல வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் திரும்பப்பெறக் கோரி, தென்காசி மாவட்ட சமூக பாதுகாப்பு இயக்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை (ஏப். 25) காலை 10 மணிக்கு பாவூா்சத்திரம் காமராஜா் சிலை அருகே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.