குற்றாலம் பேரருவியில் ஓரமாக நின்று குளிக்க அனுமதி

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் தண்ணீா் அதிகமாக விழுவதால் சுற்றுலாப் பயணிகள் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்தனா்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் தண்ணீா் அதிகமாக விழுவதால் சுற்றுலாப் பயணிகள் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்தனா்.

குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த தொடா் சாரல்மழையின் காரணமாக, புதன்கிழமை அதிகாலையில் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து இரண்டு அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. முற்பகலில் தண்ணீா் வரத்து குறைந்ததைத் தொடா்ந்து, பேரருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். பேரருவியின் மையப்பகுதிக்கு செல்ல முடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

குற்றாலம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மெல்லிய சாரல்மழை பெய்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com