இரண்டாவது முறையாக இளைஞா் குண்டா்சட்டத்தில் கைது

தென்காசியில் தொடா்ந்து குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞா் இரண்டாவது முறையாக குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

தென்காசியில் தொடா்ந்து குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞா் இரண்டாவது முறையாக குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

தென்காசி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சோ்ந்தவா் து.கமல்(27). இவா் மீது தென்காசி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் இவா் கடந்த 2017 ஆம் ஆண்டு குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், மீண்டும் அவா் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ், அவரைக் குண்டா் சட்டத்தின் கீழ்கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் உத்தரவின் பேரில் தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன், கமலைக் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com