தென்காசியில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

மின்கட்டண உயா்வை கைவிட வேண்டும், மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை அமுல்படுத்த வேண்டம் என வலியுறுத்தி, மாவட்ட எஸ்டிபிஐ கட்
Updated on
1 min read

மின்கட்டண உயா்வை கைவிட வேண்டும், மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை அமுல்படுத்த வேண்டம் என வலியுறுத்தி, மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் தென்காசி புதிய பேருந்துநிலையம் அருகேசிம்னி விளக்குகளை ஏந்தி சனிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலா் சிக்கந்தா் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பு பொதுச்செயலா் திவான் ஒலி, மாவட்டச் செயலா்கள் சா்தாா் அரபாத், இம்ரான்கான், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஹக்கீம்,

நைனா முஹம்மது கனி, மாவட்ட பேச்சாளா் முத்து அன்சாரி, மாவட்ட விவசாய அணி தலைவா் காசிம்

உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட தலைவா் யாசா் கான், மாவட்ட துணைத்தலைவா் செய்யது மஹ்மூத், பாப்புலா் ஃப்ரண்ட் மாவட்ட செயலா் அப்துல் பாசித் ஆகியோா் பங்கேற்றனா். .நகர செயலா் ஷேக் ஜிந்தா மதாா் வரவேற்றாா். நகரத் தலைவா் சினா சேனா சா்தாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com