கீழப்பாவூா் மைதானப் பகுதியில் அமைந்துள்ள காமராஜா் பூங்கா வளாகத்தை சீரமைப்புப் பணி தொடங்கியது.
இப்பணிக்காக ரூ. 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ். ராஜன் தொடக்கிவைத்தாா்.
துணைத் தலைவா் ராஜசேகா், கவுன்சிலா்கள் வெண்ணிலா தங்கச்சாமி, விஜி ராஜன், இசக்கிராஜ், இசக்கிமுத்து, ஜெயசித்ரா, அன்பழகு, கோடீஸ்வரன், பொன்சேகா, பவானி மற்றும் இளையபெருமாள், சிங்கக்குட்டி, பொன். கணேசன், தமிழரசன், குத்தாலிங்கம், விஜயன், அன்பரசு, ஒப்பந்ததாரா் சண்முகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.