விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூா் ஒன்றிய சாலைகளை சீரமைக்கக் கோரி அமைச்சரிடம் மனு

கீழப்பாவூா் ஒன்றியத்தில் சாலைகளைச் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ஏ.வ.வேலுவிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் மனு அளித்துள்ளாா்.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:30 pm

DIN

கீழப்பாவூா் ஒன்றியத்தில் சாலைகளைச் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ஏ.வ.வேலுவிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் மனு அளித்துள்ளாா்.

அதன் விவரம்: கீழப்பாவூா் ஒன்றியத்த்தில் திப்பணம்பட்டி- அரியப்பபுரம் சாலை, பாவூா்சத்திரம் புதிய காய்கனி சந்தை இசக்கியம்மன் கோயில் - ஆவுடையானூா் சாலை ஆகியவை மிகவும் பழுதடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா். இவ்விரு சாலைகளும் கிராமச் சாலைகளில் இருந்து நெடுஞ்சாலைத் துறைக்கு கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ஒப்படைக்கப்பட்டது. எனவே, அந்தச் சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலை துறை நிதி ஒதுக்கி பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.