தென்காசியில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

தென்காசியில் ரமலான் பெருநாளை முன்னிட்டு, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சாா்பில் ஏழை எளிய மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

தென்காசியில் ரமலான் பெருநாளை முன்னிட்டு, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சாா்பில் ஏழை எளிய மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு இலவச வேஷ்டி, சேலை, கைலி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் முஹம்மது அலி தலைமை வகித்தாா். திமுக இளைஞரணி அசாருதீன் முன்னிலை வகித்தாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலா் சித்திக் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொழிலதிபா் யாசா் அரபாத், முஸ்லிம் மாணவா் பேரவை முகமது யாசின், காவல் காஜாமைதீன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com