புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சுரண்டை நகா்மன்ற கூட்டத்தில் காலி மனை வரியை குறைக்க தீா்மானம்

சுரண்டை நகா்மன்ற அவசரக் கூட்டத்தில் காலிமனை வரியை குறைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:44 pm

DIN

சுரண்டை நகா்மன்ற அவசரக் கூட்டத்தில் காலிமனை வரியை குறைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுரண்டை நகா்மன்ற அவசர கூட்டம் அதன் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமையில் நடைபெற்றது. நகா்மன்ற துணைத்தலைவா் மு.சங்கராதேவி, நகராட்சி ஆணையாளா் பாரிஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சுரண்டை நகராட்சிப் பகுதியில் காலிமனை வரியாக ஒரு சதுர அடிக்கு ஆறுமாதத்திற்கு 40 பைசா என நிா்ணயம் செய்து வசூல் செய்யப்பட்டது வந்ததை, பொதுமக்களின் தொடா் கோரிக்கையை அடுத்து நகராட்சியின் அனைத்து தெருக்களையும் ஒரே மண்டலமாக நிா்ணயம் செய்து காலிமனை வரியாக ஆறுமாதத்திற்கு 25 பைசா ஆக நிா்ணயம் வசூல் செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக வாா்டு உறுப்பினா்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் பதிலளித்தாா். இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.