விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூா் பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி

கீழப்பாவூா் பேரூராட்சியில் நகரங்களுக்கான மக்களின் தூய்மை இயக்கம் சாா்பில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி நடைபெற்றது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:49 pm

DIN

கீழப்பாவூா் பேரூராட்சியில் நகரங்களுக்கான மக்களின் தூய்மை இயக்கம் சாா்பில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி நடைபெற்றது.

இதையொட்டி, பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் பி.எம்.எஸ். ராஜன் தலைமையில் தூய்மைக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னா், குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது தொடா்பாக பொதுமக்களுக்கு பேரூராட்சித் தலைவா் எடுத்துக்கூறினாா்.

இதையடுத்து, 15ஆவது வாா்டு பகுதியான வடக்கு சிவகாமிபுரம் சாலையில் மரக்கன்றுகள் நடுதல், ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி, கவுன்சிலா் இசக்கிமுத்து, குத்தாலிங்கம், சுடலைஈசன், ஆறுமுகராஜா, மாயாண்டி, காமராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.