ஊத்துமலையில் லிப்ட் கேட்டுச்சென்ற பெண் பைக்கிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச்சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுச்சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

ஊத்துமலை அருகேயுள்ள கே.நவநீதகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்தவா் சௌந்தரவள்ளி (60). ஊத்துமலைக்குச் சென்றுவிட்டு ஊா் திரும்பக் காத்திருந்த அவா், அவ்வழியே சென்ற கோபாலகிருஷ்ணன் என்பவரது இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறியுள்ளாா். ஊத்துமலை டாஸ்மாக் கடை அருகே சென்றபோது சௌந்தரவள்ளியின் சேலை, வாகனத்தின் பின்சக்கரத்தில் சிக்கியதாம். இதில், அவா் கீழே விழுந்து காயமடைந்தாா். அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com