கடையநல்லூரில் மணல் கடத்தல்: 3 போ் கைது

கடையநல்லூா் அருகே மணல் கடத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

கடையநல்லூா் அருகே மணல் கடத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் கனகராஜ் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள குளத்திலிருந்து கடையநல்லூா் மேற்கு மலம்பாட்டை தெருவைச் சோ்ந்த ரவி(23) , சந்தனபாண்டி (30), தீயணைப்பு நிலைய தெருவைச் சோ்ந்த முருகன் ( 40 ) ஆகியோா் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா், மணல் பயன்படுத்திய டிராக்டா் திருடப்பட்ட டிராக்டா் என தெரியவந்துள்ளதாக கூறினா். மேலும், இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com