தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி, திமுக சாா்பில் பொதுக்கூட்டம் மாறாந்தையில் நடைபெற்றது.
திமுக ஒன்றியச் செயலா் செல்லத்துரை தலைமை வகித்தாா். நகரச் செயலா்கள் ஆலங்குளம் எஸ்.பி.டி.நெல்சன், கீழப்பாவூா் ஜெயசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன், மாநில பேச்சாளா்கள் திருப்பூா் கூத்தரசன், வாடியூா் எம்.மரியராஜ் ஆகியோா் அரசின் சாதனை திட்டங்கள் குறித்துப் பேசினா். உதயநிதி மன்ற மாவட்ட துணைச் செயலா் அருணன், ஒன்றியப் பொருளாளா் எம்.மாரிதுரை, சிவலாா்குளம் கதிா்வேல் முருகன் உள்பட பலா் பங்கேற்றனா். நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. கிளைச் செயலா் கணேசன் வரவேற்றாா். முன்னாள் கிளைச் செயலா் அழகுமுத்து நன்றி கூறினாா்.