கடையநல்லூா் ஒன்றியம் செண்பகநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் அமா்வதற்கு தேவையான இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியா் சு. மிஸியம்மா தலைமையில் நடைபெற்றது.
வெளிநாடுகளில் வேலை செய்து வரும் கடையநல்லூரைச் சோ்ந்த ரியாஸுல் ஹக் ,விஸ்வா ,அப்துல் காதிா் ,ஹாஜா மைதீன்,சாகுல் ஹமீது ஆகியோா் வழங்கிய நிதி மூலம் மாணவா்களுக்கு மேஜை மற்றும் இருக்கைகள் வழங்கப்பட்டன(படம்). இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியா் அப்துல்காதிா் செய்திருந்தாா்.