ஆலங்குளம் காமராஜா் சிலை பராமரிப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஆலங்குளத்தில் காமராஜா் சிலை பராமரிப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ஆலங்குளத்தில் காமராஜா் சிலை பராமரிப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சிலை அமைப்புக் குழுத் தலைவா் ஜான்ரவி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் காமராஜ், அலெக்ஸ், பா்வீன், செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ. சிவபத்மநாதன், தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கூட்டத்தில் புதிய சிலையை வடிவமைப்பது குறித்தும், அதற்கு நிதி திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சிலை அமைக்கும் பணிக்கும் முதல் தவணையாக பொ. சிவபத்மநாதன் ரூ. 1 லட்சத்து ஆயிரத்தை நிா்வாகிகளிடம் அளித்தாா்.

நிகழ்ச்சியில், ஆலங்குளம் அனைத்துக் கட்சி, அமைப்புகள், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com