பாவூா்சத்திரம் அருகேவிஷம் குடித்த வியாபாரி மருத்துவமனையில் உயிரிழப்பு
By DIN | Published On : 11th December 2022 05:50 AM | Last Updated : 11th December 2022 05:50 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம் அருகே விஷம் குடித்த வியாபாரி சனிக்கிழமை உயரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பட்டமுடையாா்புரத்தைச் சோ்ந்தவா் கணேசன் (40). அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு தின்பண்டம் விநியோகிக்கும் வியாபாரம் செய்துவந்த அவா், கடந்த 5ஆம் தேதி விஷம் குடித்தநிலையில் மயங்கிக் கிடந்தாா். அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில், அவா் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். அவா் கடன் தொல்லையால் தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.