சுரண்டை நகராட்சியின் புதிய ஆணையராக முகமது சம்சுதீன் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.
சுரண்டை நகராட்சி ஆணையராக இருந்த லெனின் இடமாற்றம் செய்யப்பட்டாா். இதனையடுத்து தென்காசி நகராட்சி ஆணையா், கூடுதல் பொறுப்பாக சுரண்டை நகராட்சியைக் கவனித்து வந்தாா். இந்நிலையில், புதிய ஆணையராக நியமிக்கப்பட்ட முகமது சம்சுதீன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் இதற்கு முன் தேனியில் பணியாற்றினாா்.
சுரண்டை நகா்மன்ற தலைவா் ப.வள்ளிமுருகன், தென்காசி நகராட்சி ஆணையாளா் பாரிஜான் மற்றும் சுரண்டை நகா்மன்ற உறுப்பினா்கள் புதிய ஆணையருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.