பாவூா்சத்திரம் அருகேயுள்ள பூபாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.20 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இப் பணியை ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் மனோஜ்பாண்டியன் தொடக்கி வைத்தாா். பெத்தநாடாா்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயராணி கலைச்செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராதாகுமாரி, அதிமுக (ஓ.பி.எஸ்.அணி) மாவட்டச் செயலா் கணபதி, பொதுக் குழு உறுப்பினா் சௌ.ராதா, அண்ணா தொழிற்சங்க மண்டலத் தலைவா் சோ்மதுரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.