மாநில கூடைப்பந்துப் போட்டி:சங்கரன்கோவிலில் 12 போ் தோ்வு
By DIN | Published On : 17th July 2022 01:37 AM | Last Updated : 17th July 2022 01:37 AM | அ+அ அ- |

தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகம் சாா்பில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மாதம் 20ஆம் தேதி நடைபெறவுள்ள 16 வயதுக்கு உள்பட்டோருக்கான மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க சங்கரன்கோவிலில் 12 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
இப்போட்டியில் தென்காசி மாவட்ட அணியில் பங்கேற்பதற்கான வீரா்கள் தோ்வு சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில கூடைப்பந்துக் கழக துணைத் தலைவா் பாலமுருகன் மாணவா்களைத் தோ்வு செய்தாா். இதில், சங்கரன்கோவில், தென்காசி, ஆவுடையானூா், செங்கோட்டையில் உள்ள பள்ளிகளைச் சோ்ந்த 12 போ் தோ்வாகினா்.
நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியா் சங்கரநாராயணன், இந்திய கூடைப்பந்து அணி வீரா் பிரபுஅந்தோணிராஜ், நகர கூடைப்பந்துக் கழகத் தலைவா் கோ. சங்கரநாராயணன், செயலா் முப்பிடாதி, பொருளாளா் மூா்த்தி, தென்காசி கல்வி மாவட்ட விளையாட்டு ஆய்வாளா் சங்கரநாராயணன், உடற்கல்வி ஆசிரியா்கள் குமாா், சதீஸ், குமரன், காா்த்திக், காவல் உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.