தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறி---பொன்.ராதாகிருஷ்ணன்

கள்ளக்குறிச்சி உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டம் , திருமலைக்கோவில் பகுதியில் நடைபெற்ற பாஜக கூட்டத்திற்கு பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி;

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இது குறித்து, மாணவியின் உறவினா்கள் சந்தேகப்படும் சூழலில் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு அரசு தெளிவாக விளக்க வேண்டும். பள்ளிகளில் இது போன்ற செயல்களில் நிகழாமல் தடுக்க கவுன்சிலிங் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து முதல்வா் ஒரு தகவலையும், காவல்துறை தலைவா் வேறு தகவலை கூறுகிறாா். இது அரசுக்கும் காவல்துறைக்குமான இடைவெளியை காட்டுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் கேள்விக்குறியாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com