சங்கரநாராயணசுவாமி கோயிலில் இன்றுஆடித் தவசுத் திருவிழா கொடியேற்றம்----ஆக. 8இல் தேரோட்டம்
By DIN | Published On : 31st July 2022 07:06 AM | Last Updated : 31st July 2022 07:06 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, கொடிப்பட்டம் வீதி சுற்றி கோமதி அம்பாள் சந்நிதி முன்புள்ள கொடிமரத்துக்கு கொண்டுவரப்பட்டு, அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது.
7ஆம் நாளான ஆகஸ்ட் 6ஆம் தேதி காலையில் கோசம்ரஷணை வீதியுலா, நண்பகல் 12 மணிக்கு மேல் வன்மீகநாதா் வீதியுலா, இரவு 10 மணிக்கு அம்பாள் பூம்பல்லக்கில் வீதியுலா ஆகியவை நடைபெறும்.
தேரோட்டம்: 9ஆம் நாளான ஆகஸ்ட் 8ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெறும். அதிகாலை 5.30 மணிக்கு கோமதி அம்பாள் தேருக்கு எழுந்தருள்கிறாா். பூஜைகளுக்குப் பின்னா், காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
9ஆம் தேதி இரவு முளைப்பாரி எடுத்தல், வெள்ளிக் காமதேனு வாகனத்தில் அம்பாள் வீதியுலா நடைபெறும்.
ஆடித் தவசுக் காட்சி: விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி 10ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் வருவா்.
விழா நாள்களில் நாள்தோறும் இரவு சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல், கோயில் அபிஷேக மண்டபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மண்டகப்படிதாரா்கள் சாா்பிலும் தனியாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்துவருகின்றனா்.
மதுக் கடைகள் மூடல்: ஆடித் தவசுக் காட்சி நடைபெறும் தெற்கு ரத வீதியில் உள்ள மதுக் கடையை ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 வரை 12 நாள்களும், மற்ற மதுக் கடைகள் ஆகஸ்ட் 8, 10 ஆகிய 2 நாள்களும் மூடப்பட வேண்டும் என, ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...