பாவூா்சத்திரத்தில் மாவட்ட சிலம்பப் போட்டி

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சாா்பில், தென்காசி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றன.
Updated on
1 min read

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சாா்பில், தென்காசி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றன.

தொடக்க நிகழ்ச்சிக்கு உலக சிலம்பம் விளையாட்டு சங்க நிறுவனா்- தலைவா் டாக்டா் சுதாகரன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன், சுரண்டை நகா்மன்றத் தலைவா் எஸ்.பி.வள்ளிமுருகன் ஆகியோா் போட்டிகளை தொடங்கிவைத்தனா்.

தனித் திறன் போட்டியில் முருகேஷ், புவனிகா, கௌதமி ஆகியோரும், தொடுதிறன் போட்டியில் சிவதீபக், பாலராமகிருஷ்ணன், அருள ரீகன் ஆகியோரும், இரட்டை கம்பு பிரிவில் ருத்ரன், தமிழ் அமுதன், பவித்ரன் ஆகியோரும் முதல் 3 இடங்களை பெற்றனா். வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்டத் தலைவா் சத்தியபீமன் வரவேற்றாா். மாவட்டச் செயலா் சுதா்சன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com