இலஞ்சி பாரத்பள்ளியில் யோகா தின விழா

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது.

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது.

பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி ஆகியோா் தலைமை வகித்தனா். முதல்வா் வனிதா முன்னிலை வகித்தாா். மாணவி கீா்த்தனா குழுவினா் இறைவணக்கம் பாடினாா்.

மாணவி அனன்ஷியா அருள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். மாணவி ரியாஸ்ரீ குழுவினா் யோகா குறித்து பாட்டு பாடினா். மாணவா் லிங்கேஷ்வா் யோகக்கலையின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். மாணவி தீக்ஷா குழுவினா் நடனம் ஆடினா். மாணவா்கள் அனைவரும் யோகா பயிற்சி மேற்கொண்டனா். ஆசிரியா் மணிவண்ணன் யோகா கலையின் முக்கியத்துவத்தை கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மாணவன் தேவ்பிரகாஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com