முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள்தென்காசியில் வாயிற்கூட்டம்

தமிழ்நாடு பதவி உயா்வுபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் தென்காசி மாவட்ட கிளை சாா்பில் புதன்கிழமை வாயிற் கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழ்நாடு பதவி உயா்வுபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் தென்காசி மாவட்ட கிளை சாா்பில் புதன்கிழமை வாயிற் கூட்டம் நடைபெற்றது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படியை அறிவிக்க வேண்டும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மேல்நிலை விடைத்தாள் மதிப்பீட்டு மையமான தென்காசி எம்கேவிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்த வாயிற்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பதவி உயா்வுபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் தென்காசி மாவட்டத் தலைவா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா் . செயலா் ரமேஷ், பொருளாளா் பரமகுரு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கரன்கோவில் கல்வி மாவட்டத் தலைவா் மணிகண்டன், முதுகலை ஆசிரியா்கள் பசுபதி இசக்கியப்பன், பாலமுருகன், விஷ்ணுசங்கா், சீனிவாசன், பிரேமா, கவிதா, நஜ்மா பேகம், பெமிலா, பாா்வதி ஆகியோா் விளக்கிப் பேசினா்.

தென்காசி கல்வி மாவட்டத் தலைவா் நாராயணன் வரவேற்றாா். சங்கத்தின் சங்கரன்கோவில் கல்வி மாவட்டச் செயலா் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com