பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என செங்கோட்டை கிளை அரசு ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
செங்கோட்டை கிளை அரசு ஓய்வூதியா்கள் சங்கத்தினா் தென்காசி மாவட்ட அரசு ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் வைரவன் தலைமையில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும், 70, 75, 80 வயது நிறைவடைந்தா்களுக்கு ஓய்வூதிய உயா்வு, பணியிலிருப்பவா்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.
அப்போது, செங்கோட்டை, தென்காசி, சுரண்டை, புளியங்குடி, சிவகிரி கிளை நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.