தென்காசியில் செஸ் போட்டி: மாணவ- மாணவிகள் ஆா்வம்
அகில இந்திய சதுரங்க கழகம் சாா்பில், மாவட்ட அளவிலான 15 வயதிற்குள்பட்டோா் இரண்டு நாள் செஸ் போட்டிகள் தென்காசி இ.சி.ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அரங்கில் வியாழக்கிழமை தொடங்கின.
இப்போட்டிகளை, தலைமையாசிரியா் செந்தூா்பாண்டியன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். மாநில சதுரங்க கழக இணைச் செயலா்கள் அப்துல் நாசா், எப்ரேம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை நடுவராக பழனியப்பன் செயல்பட்டாா்.
மாவட்டம் முழுவதுமிருந்து 28 அரசு - தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 170 மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா். ஒன்பது சுற்றுகளாக நடத்தப்படும் போட்டிகளில் முதல் நாளில் ஐந்து சுற்றுகள் நடைபெற்றன. மீதமுள்ள நான்கு சுற்றுகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, தென்காசி சதுரங்க கமிட்டி ஒருங்கிணைப்பாளா்கள் எஸ்.டி.வி.பெருமாள், ஆடிட்டா் பி.ஜான் டேனியல் செல்வராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.
இப்போட்டியில், வெற்றிபெறுவோா் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பியாட் செஸ் போட்டியை நேரில் காணலாம்.