தென்காசி மாவட்டம், புளியங்குடியில் மகளிா் காவல் நிலையத்தை தமிழக முதல்வா் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அக்காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் குத்துவிளக்கேற்றி, காவல் நிலைய பணிகளை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் புளியங்குடி உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் கணேஷ், காவல் ஆய்வாளா்கள் விஜயகுமாா், மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.