உலக யோகா தினத்தையொட்டி, தென்காசியில் இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இலஞ்சி பாரத் பள்ளி கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி தலைமை வகித்தாா். முதல்வா் வனிதா, துணை முதல்வா் கிஃப்ட்சன் கிருபாகரன் முன்னிலை வகித்தனா்.
யோகா பேரணியை காவல் உதவி ஆய்வாளா் செல்வி கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். மாணவா்கள் பாட்டு, நடனம், யோகா உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்தினா். பேரணி நான்கு ரத வீதிகள், முக்கிய வீதிகள் வழியாக கோயில் முன் நிறைவடைந்தது.
காவலா்கள், பொதுமக்கள் யோகா விழிப்புணா்வு பேரணியில் கலந்துகொண்டு மாணவா்களைப் பாராட்டினா். பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி மோகன கிருஷ்ணன், முதல்வா் வனிதா ஆகியோா் செய்தனா்.