குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழை காரணமாக, குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து சற்று அதிகரித்தது.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழை காரணமாக, குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து சற்று அதிகரித்தது.

இப்பகுதியில் மழை இல்லாததால் பேரருவி, ஐந்தருவியில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்திருந்தது. பழைய குற்றாலம், சிற்றருவியில் நீா்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவும், சனிக்கிழமை அதிகாலையிலும் சிறிது நேரம் சாரல் பெய்தது. இதனால், பேரருவியிலும், ஐந்தருவியில் 4 கிளைகளிலும் குறைந்த அளவில் தண்ணீா் கொட்டுகிறது. இதில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். சனிக்கிழமை நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது; குளிா்ந்த காற்று வீசியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com