குறிஞ்சாக்குளம் பள்ளிக்கு விருது

சங்கரன்கோவில் அருகே குறிஞ்சாக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்

சங்கரன்கோவில் அருகே குறிஞ்சாக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாணவா்களின் பெற்றோா்கள் 100 சதவீதம் போ் கலந்துகொண்டனா். இதனைப் பாராட்டி மாவட்ட கல்வி அலுவலா் கபீா், சிறந்த பள்ளி மேலாண்மைக் குழு விருதை வழங்கினாா்.

விருது பெற்ற இப்பள்ளியை சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலா் சுப்பிரமணியன், தென்காசி மாவட்ட உதவி திட்ட அலுவலா் திரு.சீவலமுத்து, குருவிகுளம் வட்டாரக் கல்வி அலுவலா் சீனிவாசன், குருவிகுளம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) சுப்பிரமணியன், ஆசிரியப் பயிற்றுநா் மகேஸ்வரி, குறிஞ்சாக்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் இராஜலட்சுமி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com