பீடி தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு திருத்தப்பட்ட கல்வி உதவித்தொகை

பீடி, சுரங்கத் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு திருத்தப்பட்ட கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பீடி, சுரங்கத் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு திருத்தப்பட்ட கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட செய்தி மக்கள்தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திகுறிப்பு: மத்திய தொழிலாளா் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளா்கள், சினிமா தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு திருத்தப்பட்ட கல்வி உதவித் தொகை வரும் கல்வி ஆண்டுக்கு (2022-2023)கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை (சீரூடை மற்றும் புத்தகம்) ரூ.1000, 5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ரூ.1500, 9 மற்றும்10 ஆம் வகுப்புக்கு ரூ.2000, 11ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ரூ. 3000, ஐ.டி.ஐ , பாலிடெக்னிக் படிப்புக்கு ரூ. 6000, பட்டபடிப்பு பி.எஸ்.சி (விவசாயம்) உள்பட்ட படிப்புகளுக்கு ரூ.6000, தொழில்முறை படிப்புகளுக்கு ரூ.25ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட கல்வி உதவித் தொகையை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மத்திய நல ஆணையா் பி.அருண்குமாா் தெரிவித்துள்ளாா் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com